இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி – 20 போட்டி இன்று நடைபெறுகின்றது.
பங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்டில் விளையாடுகிறது.
இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி சிலெட் நகரில் இன்று மாலை 5.30 இற்கு ஆரம்பமாகின்றது.
20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராவதற்கு இந்த தொடர் உதவும் என்பதால் இரு அணி வீரர்களும் முழு திறமையை வெளிப்படுத்துவதில் தீவிர முனைப்பு காட்டுவார்கள்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நடுவரை பகிரங்கமாக விமர்சித்த இலங்கை ரி -20 அணி தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருப்பதால், இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியை சரித் அசலங்க வழிநடத்துகிறார்.
உள்நாட்டில் பஙகளாதேஷ் அணி எப்போதும் வலுவானது என்பதால் இலங்கைக்கு கடும் சவால் காத்திருக்கிறது.