ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,ஜப்பானிய டிஜிட்டல் மயமாக்கல் அமைச்சர் டாரோ கோனோ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாடுகளுக்கான முனைப்புகள் தொடர்பில் ஜனாதிபதி தெளிவுபடுத்தியிருந்ததோடு, டிஜிட்டல் முறைமைக்கு மாறுவதற்கான வேலைத் திட்டங்களின் போது இரு நாடுகளினதும் தொடர்புளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வியட்நாம் பிரதி பிரதமர் ட்ரான் லூ குவாங் ஆகியோருக்கிடையில் ஜப்பானில் இடம்பெற்ற சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் மற்றும் கலாசார தொடர்புகளை பலப்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானிலுள்ள இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் 20 வது ஆண்டுபூர்த்தி நிகழ்வில் கலந்துகொண்டதோடு அதன் அங்கத்தவர்களுடனான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இலங்கையில் முதலீடு மற்றும் வர்த்தகங்கள் ஆரம்பிப்பதற்கு இலங்கை தொழில் முயற்சியாளர்களின் உலகளாவிய சம்மேளனம் ஒன்றை உருவாக்குதல் மற்றும் உள்ளக தொடர்பாடல்களை வலுப்படுத்தல் என்பனவே மேற்படி சந்திப்பின் நோக்கமாகும்










