ஜீவன் அமைச்சராக இருந்து எந்த பயனும் இல்லை!

சம்பள உயர்வு விடயத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் லெட்சுமணன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

“ பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1700 ரூபா வழங்கப்பட வேண்டும் என அரசாங்கத்தினால் வர்த்தமானி வெளியிடப்பட்டது. இருப்பினும் குறித்த வர்த்தமானிக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த மே முதலாம் திகதி மேதினத்தன்று வீரவசனம் பேசினார்கள். ஆனால் இன்று மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். அமைச்சர்கள் மற்றுமல்ல மலையகத்தை சேர்ந்த இன்னொரு பாராளுமன்ற உறுப்பினரும் சேர்ந்து மக்களை ஏமற்றுகின்றார்.

இவர்கள் தற்போது மக்களிடம் நல்லவர்கள் போல் நாடகம் நடிக்கின்றார்கள். மலையக மக்களுக்கு ஒரு நாள் சம்பளம் 1700 ரூபா தற்போது மிகவும் அவசியமான பிரச்சினை. அதையும் கூட இவர்களால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.

கடைசியாக கூட்டி கழித்து பார்த்தால் முதலாளிமார் சம்மேளனம் மாத்திரமே வெற்றி பெற்று உள்ளது.

இவர்கள் அமைச்சு பதவியில் இருந்து எந்த பயனும் இல்லை. அது மாத்திரமல்லாமல் அமைச்சருக்கு நுவரெலியா நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதுவே ஒரு சாதாரண குடி மகனுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தால் வீதியில் இழுத்து சென்று ஜீப் வண்டியில் ஏற்றி இருப்பார்கள்.

அது மாத்திரம் இன்றி இவரை கைது செய்வது ஏன் என்றால் இவர் நுவரெலியா நீதிமன்றத்திக்கு சமுகமளிக்காமையால் தான் இவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவரை தியாகி என்றோ நெல்சன் மண்டேலா அல்லது மகாத்மா காந்தி என்று கூறியோ இவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.

மக்கள் இதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles