ஜேர்மனியில் மக்கள் கூட்டத்துக்குள் காரை புகுத்தி தாக்குதல் – இருவர் பலி

ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் காரை தாறுமாறாக ஓட்டி நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் பலியாகினர். 68 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சவுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதலில் இத்தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஒரு குழந்தை உள்பட இருவர் மட்டுமே உயிரிழந்ததாக அரசு தரப்பு உறுதி செய்துள்ளது.

இது குறித்து ஜெர்மன் போலீஸார் கூறுகையில், மேக்டேபர்க் நகரில் வெள்ளிக்கிழமை மாலை கிறிஸ்துமஸ் சந்தைக்குள் கார் ஒன்று தாறுமாறாக ஓடியதில் 2 பேர் கொல்லப்பட்டர். 60 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக சவுதி அரேபியாவைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தான் அந்தக் காரை ஓட்டிவந்தார். அவர் ஓட்டிவந்த பிஎம்டபிள்யு காரை வாடகைக்கு எடுத்துள்ளார். அவர் மட்டுமே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது உறுதியானதால் இனி வேறு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அந்த நபர் கடந்த 20 ஆண்டுகளாக ஜெர்மனியில் நிரந்தரக் குடியுரிமை பெற்று வசித்துவந்தார். ” என்றார்.

இந்த தாக்குதல் குறித்து ஜெர்மன் பிரதமர் ஓலஃப் ஸ்கால்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “மேக்டேபர்க் சம்பவத்துக்கு கண்டனங்கள். உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். நெருக்கடியான நேரத்தில் பாதுகாப்பு, மீட்புப் பணிகளில் ஈடுபட்டோருக்கு எனது நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார்.

8 ஆண்டுகளுக்கு முன்னர்… 8 ஆண்டுகளுக்கு முன்னர் அனீஸ் அம்ரி என்ற டுனீசியவைச் சேர்ந்த அகதி ஒருவர் பெர்லினில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தையில் டிரக்கை செலுத்தி 12 பேரைக் கொன்ற சம்பவம் நினைவு கூரத்தக்கது. அதே பாணியில் இப்போது ஒரு தாக்குதல் நடந்துள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவத்துக்கு சவுதி வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியுள்ளதோடு, ஜெர்மனி மக்களோடு தோளோடு தோள் நிற்போம் என்றும் கூறியுள்ளது.

இது தொடர்பாக சவுதி வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “வன்முறையை நிராகரிப்பதில் சவுதி அரசு உறுதியாக இருக்கிறது, மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபத்தையும் இரங்கலையும் வெளிப்படுத்துகிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles