தமிழீழ வைப்பகத்திலிருந்து மீட்கப்பட்ட நகைகளை மக்களிடம் ஒப்படைக்க பொறிமுறை!

தமிழீழ வைப்பகத்திலிருந்து பெறப்பட்ட நகைகளை, அவற்றின் உரிமையாளர்களிடம் விரைவில் கையளிப்பதற்குரிய பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

” தமிழீழ வைப்பகத்தில் வைக்கப்பட்ட நகைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார். எனினும், அதற்குரிய நடவடிக்கை இன்னும் ஆரம்பமாகவில்லை.

வடக்கு மாகாணத்திலுள்ள பலர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவீகரனிடம் அடகுச்சீட்டுகளை கையளித்துள்ளனர். வடக்கிலுள்ள அரசாங்க அதிபரிடம் இது பற்றி கேட்டால், இன்னும் எவ்வித உத்தரவும் கிடைக்கப்பெறவில்லை என பதில் வருகின்றது.
எனவே, மக்களின் நகைகளை அவர்களிடமே மீண்டும் – வெகுவிரைவில் கையளிப்பதற்குரிய பொறிமுறையை உருவாக்க வேண்டும்.” – என கவீந்திரன் கோடீஸ்வரன் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles