அமைச்சரவை, மரபுகளைமீறி கடும் விமர்சனங்களை முன்வைத்த தம்மிக்க பெரேராவை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இது தொடர்பான தனது நிலைப்பாட்டை பிரதமர், ஏற்கனவே ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளார் எனவும் அறியமுடிகின்றது.
நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், உரிய திட்டம் இல்லை எனவும் , நிதியமைச்சர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் எனவும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா நேற்று (ஜூலை 06) அறிவித்தார்.
இந்நிலையிலேயே அவரை அமைச்சு பதவியில் இருந்து நீக்குமாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
