ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் எம்.பியான தம்மிக்க பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.
பஸில் ராஜபக்ச பதவி விலகிய பின்னர், நாடாளுமன்றம் வந்த தம்மிக்க பெரேராவுக்கு, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவியும் வழங்கப்பட்டது.
அமைச்சு பதவியை ஏற்ற பின்னர், நிதி அமைச்சராக செயற்பட்ட அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கடுமையாக விமர்சித்தார். நிதி அமைச்சு பதவியில் இருந்து அவர் நீக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
ஜுலை 9 ஆம் திகதி அமைச்சு பதவியை தம்மிக்க பெரேரா, இராஜினாமா செய்தார்.
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில், எம்.பி. பதவியையும் துறப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.










