தலவாக்கலையில் குளவிக்கொட்டு: மூவர் பாதிப்பு!

 

குளவிக்கொட்டுக்கு இலக்கான மூவர் லிந்துலை வைத்தியிசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் இன்று மாலை 3 மணிக்கு தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலை நகரில் இருந்து புகையிரத வீதியூடாக சென்ற மூவரே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் லிந்துலை வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம் செய்ய உள்ளதாக லிந்துல்ல வைத்திய சாலையில் உள்ள வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கௌசல்யா

Related Articles

Latest Articles