தாழ்நில பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

நீர்ஏந்து பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக உடவலவ நீர்த்தேக்கம் தற்போது நிரம்பி வருகின்றது.

இதன் காரணமாக உடவலவ நீர்த்தேக்கம் அடுத்த 48 மணித்தியாலங்களில் நிரம்பி வழிய ஆரம்பிக்கும் என மகாவலி அதிகார சபையின் நீர் முகாமைத்துவ பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபையின் நீர் முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதன்படி, உடவலவ நீர்த்தேக்க ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள தாழ்நில மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles