தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் தேசிய முன்னணியின் மத்திய குழுக் கூட்டம், கினிகத்தேனையில் அமைந்துள்ள வெரிட்டாஸ் விடுதியில் முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரம் தலைமையில் இன்று (13) நடைபெற்றது.
இதன்போதே முன்னணியின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், பிரதிப் பொதுச் செயலாளர் வீ.புத்திரசிகாமணி ஆகியோர் நீக்கப்பட்டு, அப்பதவிகளுக்குப் புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி தொழிலாளர் தேசிய சங்கத்தின் அரசியல் பிரிவான தொழிலாளர் தேசிய முன்னணியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக சவரிமுத்து வைலட்மேரியும் பிரதிப் பொதுச் செயலாளராக ரட்ணம் சிவகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்பதாக முன்னணியின் பொதுச் செயலாளராக இருந்த எம். திலகராஜ், பிரதி பொதுச் செயலாளராக இருந்த வீ. புத்திரசிகாமணி, கொட்டகலை அமைப்பாளராக இருந்த செந்தூரன் ஆகியோர், அந்தப் பதிவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.
அதேவேளை, தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவர் பதவி உதயகுமார் எம்.பிக்கு வழங்கப்பட்டுள்ளது.










