துமிந்த திஸாநாயக்கவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 19ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை சொகுசு தொடர்மாடி தொகுதியில் தங்க முலாம் பூசப்பட்ட T-56 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கடந்த மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டார்

Related Articles

Latest Articles