தெமோதரயில் விபத்து – இரு பெண்கள் காயம்!

பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் தெமோதர உடுவர பகுதியில் இன்று காலை (20/10) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.

இரு ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் ஹாலி எல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Latest Articles