தேயிலை விளைச்சலை அதிகரிக்க திட்டம் – மானிய விலையில் உரம்!

“ தேயிலை, இறப்பர் மற்றும் தென்னைப் பயிர்ச்செய்கைக்கு இரண்டு அரசாங்க உர நிறுவனங்களின் மூலம் உரங்களை மானிய விலையில் வழங்கும் திட்டத்தையும் ஆரம்பிக்க உள்ளோம். இதன் கீழ் தேயிலைக்காக தயாரிக்கப்பட்ட விசேட உரம், மானிய விலையில் வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டது.” – என்று கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கூறியதாவது,

“ தேயிலைப் பயிர்ச்செய்கையின் விளைச்சலை அதிகரிப்பதற்காக, அனைத்து தேயிலை உரங்களையும் அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களான கொமர்ஷல் உர நிறுவனம் மற்றும் லங்கா உர நிறுவனம் மூலம் உற்பத்தி செய்ய விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

மிக உயர்ந்த தரமான தேயிலை உரம் அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, தேயிலை விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதன்படி தேயிலை விவசாயிகளுக்கு வற் வரியுடன் விற்பனை செய்யப்படும் தொகையை விட 2,000 ரூபா குறைந்த விலையில் இந்த உரத்தை வழங்குவோம். இந்த விலை குறைப்பு சந்தை விலையுடன் ஒப்பிடும் போது சுமார் 50 சதவீதம் குறைப்பு என்று கூறலாம்.

இதன்படி, T-200 மற்றும் T-750 தேயிலை உர மூட்டை ஒன்றின் விலை 5,500 ரூபாவாகவும், T-709 மற்றும் T-834 தேயிலை உரத்தின் விலை 7,735 ரூபாவாகவும் குறைக்கப்படவுள்ளது. மேலும், உரங்களை முறையாகப் பயன்படுத்துவதுடன், புதிய பயிர்ச் செய்கை தொழில்நுட்பமும் நமது தேயிலை உற்பத்திக்கு அறிமுகப்படுத்தப்படும்.

மேலும், அதிக அடர்த்தி பயிர்ச்செய்கை முறையின் கீழ் 59 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அந்த 55 திட்டங்கள் மிகவும் வெற்றிகரமானவை. ஒரு மாதத்தில் ஒரு ஏக்கரில் சுமார் 1,350 கிலோ தேயிலை கொழுந்துகளை அறுவடை செய்கின்றனர். இந்த ஆண்டு இத்திட்டத்திற்காக 1,000 மில்லியன் ரூபா செலவிட உள்ளோம்.

மானிய விலையில் தேயிலை உரம் வழங்குவதற்கான முத்தரப்பு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை தேயிலை சபை மற்றும் சிறிய தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபை ஆகியன அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டன.

இலங்கையில் தேயிலை பயிர்ச் செய்கையின் விளைச்சலை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இந்த மானிய விலையில் உரம் வழங்குவது பெரும் உதவியாக இருக்கும் என நான் நம்புகிறேன்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்கு அரசியல் பார்வையினால் இவ்வாறான நடவடிக்கைகள் சாத்தியமாகியுள்ளன.

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு கமத்தொழில் அமைச்சுடன் இணைக்கப்படாவிட்டால் இந்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவது சாத்தியமற்றது” என கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles