தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்த உத்தரவிடுமாறுகோரி தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணையை எதிர்வரும் 23 ஆம் திகதிவரை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் விஜேசுந்தர என்பவரே குறித்த ரிட் மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார் .
குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
