வவுனியா, அண்ணாநகர் பகுதியில் தொட்டில் கயிறு கழுத்தில் இறுதி நான்கு வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.
பரமேஸ்வரன் அருட்சிகா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தை தொட்டியில் விளையாடிக்கொண்டிருந்தபோது, தவறுதலாக அதன் கயிறு கழுத்தில் இறுகியதில் குறித்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி உயிரழந்துள்ளது.
இது தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.










