தோட்டத்தில் வதிவாளர் என்பதை உறுதி செய்யும் அதிகாரத்தை தோட்ட அதிகாரிக்கு வழங்குவதற்கு திலகர் கடும் எதிர்ப்பு

வாக்காளர் ஒருவருக்கு அடையாள அட்டை இல்லாத விடுத்து அவரது வதிவிடத்தை உறுதி செய்து தற்காலிக அடையாள அட்டை உதவி தேர்தல் ஆணையாளர் உறுதிப்படுத்தலுடன் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த பிரஜை அந்த வீட்டில் வாக்காளராக பதிவு செய்யப்பட்டு இருக்கிறார் என்பதை உறுதி செய்யும் அதிகாரம் தோட்ட அதிகாரிக்கும் உண்டு என தேர்தல்கள் ஆணைக்குழு இன்றைய கலந்துரையாடல் கூட்டத்திலே தெரிவித்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுயாதீன மலையக ஜனாதிபதி வேட்பாளர் மயில்வாகனம் திலகராஜா கூறியவை வருமாறு,

” குறித்த குடியிருப்பில் வாழும் குறித்த பிரஜை அந்த முகவரியில் வாழ்கிறார் என்பதை உறுதி செய்யும் பொறுப்பு கிராம அதிகாரிக்கே உண்டு. காலம் காலமாக தோட்ட அதிகாரிகளினால் இதனை உறுதிப்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டு வருவதனால் தான் அவர்கள் அடையாள அட்டையைப் பெற முடியாதுள்ளனர்.

எனவே தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளி ஒருவரின் தொழில் சார்ந்த அதிகாரம் தோட்ட அதிகாரிக்கு உண்டே தவிர, தோட்டத்தில் வதியும் அதிகாரியை தவிர அந்த தோட்டத்தில் வதியும் தொழிலாளியோ அல்லது தொழிலாளி அல்லாத ஒருவரோ அவர் வாக்காளராக இருந்தால் அதனை உறுதி செய்ய வேண்டியது கிராம அதிகாரியே அன்றி தோட்ட அதிகாரி அல்ல.

ஏனெனில் தோட்டத் தொழிலாளர்கள் அல்லாதவர்களும் தோட்டத்தில் வசிக்கிறார்கள்.

தோட்டத் தொழிலாளர்களாக இருந்தாலும் கூட அவரது வேலை விடயம் சம்பந்தமாக தோட்ட அதிகாரி ஏதேனும் உறுதிப்படுத்தல் செய்யலாமே தவிர இவர் இந்த தோட்டத்தின் வதிவாளர் என்பதையோ வாக்காளர் என்பதையோ உறுதி செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பு கிராம அதிகாரிக்கே உண்டு என்கின்ற நிலையில் , அந்த வதிவாளரை உறுதி செய்யும் பணியை கிராம சேவை அதிகாரிகள் வசமே ஒப்படைக்குமாறும் தோட்ட அதிகாரிகளுக்கு அதனை வழங்காது இருக்குமாறு சுயாதீன தேர்தல் ஆணைக்குழு விடம் கோரியதுடன் தேர்தல் ஆணைக்குழு இந்த அதிகாரத்தை தோட்ட அதிகாரிக்கு கொடுப்பதை தான் எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.

இன்று ( 09.09.2024) தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட சுயாதீன வேட்பாளர் மயில்வாகனம் திலகராஜாவின் கோரிக்கையையை ஏற்றுக்கொண்ட சுயாதீனக் ஆணைக்குழு தாங்கள் கலந்து பேசி இதற்கு உரிய தீர்வினை பெற்று தருவதாக தன்னிடம் பகிரங்கமாக உறுதி அளித்ததாகவும் தெரிவித்தார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles