தோட்டத் தொழிலாளர்களை இழிவுபடுத்துவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

பெருந்தோட்ட தொழிலாளர்களை இழிவுபடுத்தும் வகையில் ஒரு சில அரசசார்பற்ற நிறுவனங்கள் செயற்படுகின்றன. தங்களுடைய சுய இலாபத்திற்காகவே இவ்வாறு அந்த நிறுவனங்கள் செயற்படுகின்றன. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நடைபெற்ற (23.08.2024) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கின்ற பொழதே இவ்வாறு கறிப்பிட்டள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

ஒரு குறிப்பிட்ட அரச சார்பற்ற நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் தேர்தல் காலப்பகுதியில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அதுவும் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் இருக்கின்ற மக்களுக்கு தரம் குறைந்த கள்ளு போத்தல்கள் தேர்தல் இலஞ்சமாக வழங்கப்படுவதாக ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.ஏனெனில் தற்பொழுது பெருந்தோட்ட தொழிலாளர்களை குறிவைத்து திட்டமிட்ட அடிப்படையில் அவர்களின் நற்பெயருக்கு கழங்கம் ஏற்படுத்தும் வகையில் சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை காண முடிகின்றது.

மலையக மக்கள் தொடர்பாக தவறான கருத்தக்களை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்று அதன் மூலமாக பணம் சம்பாதிக்கின்ற செயற்பாடுகளில் ஒரு சில அரச சார்பற்ற நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன.இதனை வன்மையாக கண்டிப்பதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமானால் இது தொடர்பாக நாம் நீதிமன்றத்தை நாடுவதற்கும் திட்டமிட்டுள்ளோம்.

மலையக மக்கள் இந்த நாட்டில் மிகவும் கௌரவாமாகவும் இந்த நாட்’டின் பொருளாதாரதிற்கு பங்களிப்பு செய்து கொண்டும் இருக்கின்றார்கள்.ஆனால் அவர்களை பல சந்தர்ப்பங்களில் இழிவுபடுத்தப்படுவதை நாங்கள் பார்க்கின்றோம்.ஏதோ மலையக மக்கள் மாத்திரமே மது அருந்துபவர்களாகவும் வேறு எந்த சமூகமும் அதனை செய்வதில்லை என்பதுபோலவும் காட்டப்படுகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் அதிக அளவில் மதுபான வறிபனை நடைபெறுவதாகவும் புள்ளவிபரங்களை காட்டுகின்றார்கள்.ஆனால் அது முற்றிலும் தவறான ஒரு செயற்பாடாகும்.ஏனெனில் இந்த மாவட்டமானது ஒரு சுற்றுலா நகரமாகும் இங்கே அதிக அளவில் உல்லாச விடுதிகளும் விருந்தகங்களும் அமைந்திருக்கின்றன.

எனவே சுற்றுலா பிரயாணிகளாக இங்கு வருகின்ற உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மது அருந்துகின்றனர்.இந்த கணக்கையும் எங்களுடைய பெருந்தோட்ட மக்களின் கணக்கில் சேர்ப்பது என்பது எந்த விதத்தில் நியாயமானது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

திட்டமிட்ட அடிப்படையில் எங்களுடைய மக்கள் மீது சேறு பூசுகின்ற செயற்பாடுகளில் அரசசார்பற்ற நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன. இது தொடர்பாக நாம் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கும் எதிர்பார்க்கின்றோம் – எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles