தோட்டத் தொழிலாளர்கள் தலைநிமிர்ந்து வாழக்கூடிய சூழலை நிச்சயம் உருவாக்குவோம்

 

தொழிலாளர் தோழர்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தனை உரிமைகளையும், அங்கீகாரத்தையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயம் வழங்கும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமாலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,

‘ இந்த உலகை இயக்கிக்கொண்டிருக்கும் – உலக மக்களை வாழ வைத்துக்கொண்டிருக்கும் அத்தனை தொழிலாளர் தோழர்களுக்கும் இந்நாளில் எனது புரட்சிகரமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அன்று முதல் இன்று வரை எமது நாட்டில் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் தொழிலாளர்கள் வழங்கிவரும் பங்களிப்பு அளப்பரியவை. எனவே, உடலாலும், அறிவாலும் உழைக்கிற எவருக்கும் எந்த இடத்திலும் அநீதி இழைக்க இடமளியோம். உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை நாம் எடுப்போம்.

எமது நாட்டில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது உழைப்பை மட்டுமல்ல உயிரைக்கூட இந்நாட்டு மண்ணுக்காக உரமாக்கியுள்ளனர். எனவே, அம்மக்கள் தலைநிமிர்ந்து வாழக்கூடிய சூழலை நிச்சயம் நாம் உருவாக்குவோம். தோட்டக் காணிகளை தொழிலாளர் தோழர்களுக்கு பகிர்ந்தளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.

அதேபோல எமது கடற்றொழில் தொழிலாளர் தோழர்களுக்கும் பல்வேறு விடயங்களை நாம் செய்து வருகின்றோம். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்பட்டு வருகின்றன. எமது ஆட்சியின் கீழ் உழைப்பாளர்களுக்கு எவ்விதத்திலும் அநீதி நடக்காது.” – என்றுள்ளது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles