“ இலங்கை பொருளாதாரத்தின் முதுகெழும்பாக காணப்படுவது தேயிலையே. எனவே தேயிலையை உற்பத்தி செய்யும் எம் மலையக மக்களை தோட்டத்தொழிலாளர்கள் என குறிப்பிடப்படாமல் தேயிலை உற்பத்தி விவசாயிகள் என அழைக்கப்பட வேண்டும்.”
இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
“ நாடு வீழ்ச்சியடைந்த போதெல்லாம் தூக்கி விடும் தூணாக இருந்தது தேயிலையே ! கொரோனா காலத்தில் நாடே பொருளாதாரத்தில் வீழ்ச்சியுற்ற போது கைக்கொடுத்ததும் தேயிலை உற்பத்தியே, எனவே நாம் அம்மகத்தான வேலையை செய்பவர்களை தேயிலை விவசாய உற்பத்தியாளர்கள் என அழைக்க வேண்டும்.
உலகத்தில் தேயிலை உற்பத்தில் முதலிடம் சீனா வகித்தாலும் இலங்கையும் தேயிலை உற்பத்தியில் வளர்ச்சியடைந்து வரும் நாடாக இலங்கை உள்ளது. எனவே, அதை உற்பத்தி செய்யும் எம் மலையக சமூக மக்களை கௌரவமாக தேயிலை விவசாய உற்பத்தியாளர்களென அழைக்க வேண்டும். தோட்டத்தொழிலாளி, கூலித்தொழிலாளி என்ற பதம் நீக்கப்பட வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் எதெற்கெடுத்தாலும் வீதிக்கு இறங்கி போராடி உரிமைகளையும்,சலுகைகளையும் பெற வேண்டிய நிலை மாறி அனைத்தையும் வழங்கி ஒரு கௌரவமிக்க சமூகமாக இலங்கையில் வாழ வழிவகைகளை நாட்டு அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.” – எனவும் வே.ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
நிருபர் – நீலமேகம் பிரசாந்த்










