எம்.எஸ்.தோனி படத்தில் நடித்த மேலும் ஒரு நடிகர் தற்கொலை செய்து கொண்டார்.
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படம் ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இத்திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் சில மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், நேற்றிரவு அதே திரைப்படத்தில் நடித்த சந்தீப் நஹர் தற்கொலை செய்துகொண்டார். மும்பை கோரேகான் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த சந்தீப் நஹர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன்னதாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தனது இறுக்கமான மனநிலை குறித்து வீடியோ ஒன்றும் பதிவு செய்துள்ளார். தனது வீடியோவில், தொழில்முறை மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகள், குறிப்பாக அவரது சிக்கலான திருமணம் பற்றி பேசினார். ஆனால், அதே வேளையில் தனது மரணத்துக்கு தன் மனைவியை குறை கூறக்கூடாது என்றும் தெரிவித்தார்.
சந்தீப் நஹரின் தற்கொலை அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.