தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் ஆயிரத்து 28 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த ஒக்டோபர் முதல் இதுவரை அச்சட்டத்தைமீறிய 25 ஆயிரத்து 886 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, அத்தியாவசிய சேவைகளுக்கென அனுமதி வழங்கப்பட்டுள்ள பணியாளர்கள் பயணிக்கும் வாகங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணி இடம்பெற்றுவருகின்றது.
அதன் அடிப்படையில் சோதனைகளும் இடம்பெற்றுவருகின்றன. நேற்று காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை கொழும்பு நகருக்குள் 78 ஆயிரத்து 22 வாகனங்கள் பிரவேசித்துள்ளன.
இவற்றில் 976 வாகனங்கள் எவ்வித காரணங்களும் இல்லாமல், அத்தியாவசிய சேவை என்ற போர்வையில் கொழும்புக்குள் பிரவேசிக்க முற்பட்டுள்ளன. அவ்வாறான வாகனங்கள் திருப்பி அனுப்பட்டன.
