இலங்கையில் மேலும் 113 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று (13) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஐவர் அடங்குகின்றனர். ஏனைய 105 பேரும் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்களின் நெருங்கிய உறவினர்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொட கொத்தணிபரவல்மூலம் இதுவரையில் ஆயிரத்து 650 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.