நாட்டில் மேலும் 462 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 462 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொட கொத்தணிமூலம் 408 பேருக்கும், சிறைச்சாலை கொத்தணிமூலம் 54 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 842 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 32 ஆயிரத்து 701 பேர் குணமடைந்துள்ளனர். 7 ஆயிரத்து 954 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 187 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 37 ஆயிரத்து 154 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles