‘நாம் கல்வியில் அரசியல் செய்யவில்லை – மாணவர்களின் வளர்ச்சியே முக்கியம்’

கல்வி வளர்ச்சி மூலமே மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என கருதி அதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அன்று முதல் இன்று வரை முக்கியத்துவம் வழங்கிவருகின்றது என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டன் புனிதஜோன் பொஸ்கோ கல்லூரியில் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தின் கீழ் இரண்டு மாடிக் கட்டடம் இன்று (04) திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,

இப்பாடசாலைக்கான கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனாலும் அது மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக கையளிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டு 2 நாட்களுக்கு முன்னர் பெற்றோர் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இது தொடர்பில் எமக்கு தெரியவந்ததையடுத்து, எமது பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், மத்திய மாகாணத்தின் ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கட்டிடத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலயக்கல்விப் பணிப்பாளர், அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் இன்று கட்டிடத்தை திறந்துவைப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.

இதனை நாம் அரசியலுக்காக திறந்து வைக்கவில்லை. மாணவர்களின் கல்வி வளர்ச்சியே எமது இலக்கும். அதற்கான வழியை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ஐயா சௌமியமூர்த்தி தொண்டமான் காலம் முதல் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் வரை காங்கிரஸின் தலைமையின் கீழ் மலையக கல்வி வளர்ச்சிக்காக பல திட்டங்களை, சேவைகளை முன்னெடுத்துள்ளோம்.

கல்வி வளர்ச்சிமூலமே மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என கருதி அதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அன்று முதல் இன்றுவரை முக்கியத்துவம் வழங்கிவருகின்றது. எமது தலைவர்களும் நிதிகளை ஒதுக்கினர். ஜீவன் தொண்டமானும் தற்போது கூடுதல் கவனம் செலுத்திவருகின்றார். இது தொடர்பில் அவர் உரிய தரப்புகளுடன் ஆலோசனை நடத்திவருகின்றார்.” – என்றார்.

க.கிசாந்தன்

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles