நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை- (முக்கிய தகவல்கள் இணைப்பு)

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை (09.08.2026) ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.

இம்முறை பரீட்சைக்கு 2,94,089 மாணவர்கள் தோற்றவுள்ள அதேவேளை, நாடு பூராகவும் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பரீட்சை நேர அட்டவணை:

காலை 9:30 மணி – பரீட்சை ஆரம்பமாகும்.

முதலில் பகுதி II (Part II) பரீட்சை நடைபெறும். இதற்கு 1 மணிநேரம் 15 நிமிடங்கள் வழங்கப்படும்.

சிறிய இடைவேளைக்குப் பிறகு, காலை 11:15 மணிக்கு பகுதி I (Part I) வினாத்தாள் வழங்கப்படும். இதற்கு 1 மணிநேரம் வழங்கப்படும்.

பரீட்சை நண்பகல் 12:15 மணிக்கு நிறைவடையும்.

பெற்றோருக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்:

பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பாகவே (காலை 8:30 மணிக்கு) பிள்ளைகளைப் பரீட்சை நிலையங்களுக்கு அழைத்து வர வேண்டும்.

பெற்றோர் பரீட்சை நிலையங்களுக்குள் செல்வதற்கு அனுமதி இல்லை. இடைவேளை நேரத்திலும் வளாகத்திற்குள் செல்ல முடியாது.

எடுத்துவரக் கூடியவை & தடைகள்:

அனுமதிக்கப்பட்டவை: பேனா, பென்சில், அழிப்பான் (Eraser) மற்றும் தெளிவான போத்தலில் (Clear Bottle) குடிநீர்.

தடைசெய்யப்பட்டவை: கைப்பேசி (Mobile phone), ஸ்மார்ட் கடிகாரம் (Smart watch) மற்றும் பிற இலத்திரனியல் உபகரணங்கள்.

பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் ‘மலையக குருவி’ இணையதளத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்!

Related Articles

Latest Articles