நிகழ்நிலைக் காப்புச் சட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு!

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ளதை ஆட்சேபித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை முழுமையாக பின்பற்றாமலேயே இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் பரிந்துரைத்த திருத்தங்கள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டிருந்தால் மாத்திரமே சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டதன் மூலம் தாம் உள்ளிட்ட பிரஜைகளின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, உரிய வகையிலேயே சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என சபாநாயகர் அலுவலகம் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Latest Articles