நிமல் லான்சா நெத்திலி மீன் – பதிலடி கொடுத்தது மொட்டு கட்சி

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரான முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே.

” எமது கட்சியின் பொதுச்செயலாளர் வெளியிட்ட கருத்துக்கு நிமல் லான்சா பதில் வழங்கியுள்ளார். நெத்திலி மீன்களுக்கு நாம் பதிலடி கொடுக்கபோவதில்லை. அப்படியானவர்கள் சவால் விடுப்பதால் நாம் எதிரணியில் அமர வேண்டியதும் இல்லை. எதிரணிக்கு சென்று ஆட்சியை கவிழ்க்கும் எண்ணமும் இல்லை.” -எனவும் அவர் கூறினார்.

முதுகெலும்பிருந்தால் எதிரணிக்கு சென்று பாதீட்டை எதிர்த்துகாட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, சாகர காரியவசம், நாமல் ராஜபக்ச உள்ளிட்ட மொட்டு கட்சி உறுப்பினர்களுக்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles