நிழல் உலக தாதா ‘தெல்பாலா’ என்றழைக்கப்படும் கருப்பையா பாலனின் மகளான நிர்மலா (வயது – 41) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கிராண்பாஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே 50 கிராம் ஹேரோயினுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு, இந்தியா தப்பிச்சென்று தலைமறைவாக வாழ்ந்த தெல்பாலா அங்கு வைத்தே உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.










