நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீரில் மூழ்கி நாளாந்தம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்றா நோய், விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் பொது மருத்துவ நிபுணர் சமித்த சிறிதுங்க அது தொடர்பில் தெரிவிக்கையில்,
ஒவ்வொரு வருடமும் நீரில் மூழ்கி சுமார் 800 பேர் உயிரிழப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் நாளாந்தம் இரண்டு அல்லது மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். அந்த வகையில் எமது தகவல்களின்படி வருடாந்தம் 700 – 800 பேர் இவ்வாறு மரணமடைகின்றனர்.பண்டிகைக் காலங்களின் போது இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அறிமுகமில்லாத இடங்களில் நீராடும் போது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவ்வாறான இடங்களில் நீராடுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.