நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்கமாட்டேன்: நவீன்

நுகேகொடையில் நாளை நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்கப்போவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

கூட்டத்தில் பங்கேற்பீர்களா, இல்லையா என கட்சியின் செயலாளர் கேட்டார். இதன்போது பங்கேற்கப்போவதில்லை என தெளிவாக குறிப்பிட்டேன் என நவீன் திஸாநாயக்க தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்சக்களுடன் இனி ஒருபோதும் அரசியல் பயணம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles