நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மேலும் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை குறித்த மாவட்டத்தில் கொரோனாவால் ஆயிரத்து 481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கண்டி மாவட்டத்தில் 84 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 56 பேருக்கும் நேற்று வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
