நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு வருடந்தோறும் நடைபெறும் மலர்க் கண்காட்சி (17.04.2021) சனிக்கிழமை நுவரெலியா விக்டோரியா பூங்காவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த மலர் கண்காட்சியில் நுவரெலியா மாநகர சபையின் முதல்வர் சந்தணலால் கருணாரத்ன மத்திய மாகாண பிரதான செயலாளர் காமினி ராஜரட்ன நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட உட்பட மாநகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.










