நுவரெலியா கிரகரி வாவியில் சடலம்!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா-பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியில் சடலமொன்று மிதக்கின்றது.

64 வயதான இராமன் பத்மநாதன் என்பவரே உயிரிழந்துள்ளார் என அடையாள அட்டையை அடிப்படையாக வைத்து பொலிஸார் தெரிவித்தனர்.

கிரகரி வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோர் சடலமொன்று மிதப்பதாக பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

நுவரெலியா மாவட்ட நீதவான் ஸ்தலத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதன் பின்னர், சடலம் வாவியில் இருந்து மீட்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் வாவியில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாரா அல்லது எவரேனும் கொலை செய்துவிட்டு சடலத்தை வாவியில் போட்டுவிட்டு சென்றனரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நானுஓயா நிருபர்

Related Articles

Latest Articles