நுவரெலியா மாவட்டத்தில் 3,748 வீடுகள் பகுதியளவு சேதம்: 19 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் முகாம்களில்!

டித்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக அதிகரித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (15) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

183 பேரை காணவில்லை என பட்டியலிடப்பட்டுள்ளது.

6 ஆயிரத்து 176 வீடுகள் முழமையாகவும், 95 ஆயிரத்து 213 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

22 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் 767 வீடுகள் முழுமையாகவும், 3 ஆயிரத்து 748 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழந்துள்ளனர். 35 பேரை காணவில்லை.

206 முகாம்களில் 6 ஆயிரத்து 487 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 759 பேர் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles