நேரியல் உற்பத்தி செயல்முறை (Vertical Intergration) மூலம் உயர்தர தயாரிப்புகள் வழங்கும் Crysbr

இலங்கையின் மிகப்பெரிய கோழி இறைச்சி உற்பத்தியாளர்களான Crysbro, மேலிருந்துது கீழ் பயணிக்கும் உற்பத்தி செயல்முறையானது (Vertical Integrated) வாடிக்கையாளர்களுக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை உயர் தரமான மற்றும் உத்தரவாதமான தயாரிப்பை வழங்குகிறது.

இலங்கையில் ISO சர்வதேச தரப்படுத்தப்பட்ட கோழி உற்பத்தியாளரான Crysbro, மேலிருந்து கீழாக செயல்படுத்தப்பட்ட அதன் நேரியல் உற்பத்தி செயல்முறையின் (Vertical Integrated) மிக உயர்ந்த தரத்தை கடைபிடிக்கிறது.

“எங்கள் மேலிருந்து கீழான செயல்பாட்டு நடவடிக்கைகளில்களில் விவசாய நிலங்கள், உணவு உற்பத்தி, பண்ணைகள், இனப்பெருக்கம் செய்யும் இடங்கள், பிராய்லர் பண்ணைகள், செயலாக்கம், பேக்கேஜிங் மற்றும் நாடு முழுவதும் விநியோக சேவைகள் ஆகியவை அடங்கும்.

நாங்கள் எங்கள் தயாரிப்பு செயற்பாடுகள் வரிசையை பராமரிக்கிறோம்.” என கிரிஸ்புரோவின் சிரேஷ்ட சந்தைப்படுத்தல் முகாமையாளர் அமோர்ஸ் செலர் கூறினார்.

மேலிருந்து கீழான செயல்பாட்டு செயல்முறைக்கு ஏற்ப, Crysbro ஆனது மூலோபாய தயாரிப்பு உள்ளீடுகள், விநியோக செயல்முறைகள் மற்றும் சில்லறை விற்பனைக்கு எளிதான அணுகலைக் கொண்டுள்ளது.

இது ஏற்கனவே உள்ள செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்காமல் செயல்முறைக்கு மாற்றியமைத்து, சிக்கலான வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தயாரிப்புகளை வழங்க முடியும்.

அனைத்து விலங்குகளின் ஆரோக்கியத்தையும் உறுதி செய்வதற்காக, Crysbro தனது பண்ணைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், தரப்படுத்தல் விவரக்குறிப்புகளை கடைபிடித்தல் மற்றும் வழக்கமான ஆய்வக சோதனைகளை நடத்துதல் போன்ற சர்வதேச தரத்திற்கு ஏற்ப பலவிதமான நிலையான பசுமை விவசாய நடைமுறைகளை செயல்படுத்துகிறது.

2020 ஆம் ஆண்டில், நாட்டிலேயே முதன்முறையாக, அதிநவீன மூலக்கூறு ஆய்வக வசதி க்ரூசிபிள் செயலாக்க ஆலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. PCR (Polymerase Chain Reaction) முறையானது salmonella, Listeria மற்றும் Campylobacter போன்ற பொதுவான உணவில் பரவும் நோய்க்கிருமிகளைக் கண்டறிவதற்கும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

1972ஆம் ஆண்டு வெறும் 100 கோழிக் குஞ்சுகளோடு தரமான மற்றும் சிறந்த படைப்புக்களை சந்தைப்படுத்தி மேலோங்கி நிற்கவேண்டுமென்ற விருப்பத்துடன் நிறுவப்பட்ட க்ரிஸ்ப்ரோ நிறுவனம் இலங்கையின் முதல் மற்றும் அதிநவீன முறையில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்து செங்குத்தாக உயர்ந்திருக்கும் ஒரு நிறுவனமாகும்.

இலங்கையில் முதலாவதாக அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி முழுமையாக கணினி மயப்படுத்தி (vertically integrated) தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

தமது கடின உழைப்பின் விளைவாக தற்போது பாரிய பண்ணைகள் மற்றும் தீவன ஆலைகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் தாரக மந்திரமான ஷபண்ணையிலிருந்து மேசை கரண்டி வரை| என்ற திட்டமே வெற்றிக்கு காரணியாகும்.

மேலும் இந்த வெற்றிக்கு நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள், வெளிநாட்டவர்கள், உள்நாட்டு விவசாயிகள் மற்றும் இலங்கையிலுள்ள நுகர்வோர் ஆகியோரும் காரணமானவர்கள் ஆவர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles