“வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்னும் அரசாங்கத்தின் கருத்திட்டத்திற்கமைய, கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் பசறை தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள உள்ளூர் உற்பத்தி மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த உற்பத்தி மையத்தை கிட்டணன் செல்வராஜ் ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அவர்,
கிராம மக்களின் சுயதொழில் வாய்ப்புகளை அதிகரிப்பதோடு, உள்ளூர் வளங்களை பயன்படுத்தி உற்பத்தி நடவடிக்கைகளை மேம்படுத்துவதன் மூலம் குடும்பங்களின் வருமான நிலையை உயர்த்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என தெரிவித்தார்.
மேலும்,இந்த உற்பத்தி மையம் ஊடாக சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான பயிற்சிகள், தொழில்நுட்ப ஆதரவு மற்றும் சந்தைப்படுத்தல் வசதிகள் வழங்கப்படவுள்ளதுடன், இளைஞர்கள் மற்றும் பெண்களின் தொழில் முனைவுத்திறனை ஊக்குவிக்கும் மையமாகவும் இது செயல்படும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் பிரதேச அதிகாரிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்
நடராஜா மலர்வேந்தன்
பசறை நிருபர்










