பண்டாரவளை பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கை 11 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
சபையின் தலைவர் சங்கைக்குரிய கரகாவெல நந்தவிமல தேர ர்தலைமையில், சபை மண்டபத்தில்12-02-2021ல்சபை அமர்வு கூடியபோது, தவிசாளரால் இவ்வாண்டிற்கான வரவு – செலவுத்திட்டநிதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அதையடுத்து, நிதி அறிக்கை குறித்து வாதவிவாதங்கள் இடம்பெற்று, வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இவ்வாக்கெடுப்பில் ஆளும் பொதுஜன முன்னனிக்கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக்கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆதரவாகவும், ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியகட்சிகளைச் சார்ந்தவர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.
இதனடிப்படையில் ஆதரவாக 14 வாக்குகளும், எதிராக மூன்றுவாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து 11 அதிகப்படியான வாக்குகளால் வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கை நிறைவேற்றப்பட்டது.
எம். செல்வராஜா, பதுளை










