அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பதவி துறக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது எனவும், அவ்வாறு நடைபெற்றால் அமைச்சு பதவியை துறப்பேன் எனவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சவால் விடுத்திருந்தார்.
எனினும், தற்போது அரிசி இறக்குமதி செய்வதற் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையிலேயே தோல்வியை பொறுப்பேற்று பதவி விலகுமாறு மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
