நாட்டில் மேலும் 10 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி பதுளை மாவட்டத்தில் வெலிமடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உலங்கபொல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு, இரத்தினபுரி, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

