பயங்கரவாத தடைச்சட்டம் நிச்சயம் நீக்கப்படும்: நீதி அமைச்சர் மீண்டும் உறுதி!

 

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கவேண்டும் என்பதே தமது அரசாங்கத்தின் நிலைப்பாடு என நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பான ஆரம்பகட்டக் கலந்துரையாடல் நீதி அமைச்சில், அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவது குறித்து ஆராய்வதற்காகக் கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஜனாதிபதி சட்டத்தரணி ரின்ஸி அர்ஸகுலரத்ன தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார,

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என்பதே தமது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் எனச் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று ‘இதற்குப் பதிலாகப் புதிதாகக் கொண்டுவரப்படக்கூடிய சட்டமானது உலகளாவிய பயங்கரவாதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சவால்களுக்குத் திறம்பட முகங்கொடுக்கக்கூடியவகையில் அமையவேண்டும்.

அதேவேளை அச்சட்டம் சர்வதேச நியமங்கள் ஊடாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, எமது நாட்டின் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள மனித உரிமைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் என்பவற்றைப் பாதிக்காத வகையிலும் இருக்கவேண்டும்’ எனவும் நீதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles