பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு – மூவர் மாயம் -நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு சேதம்

அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. ஐவர்  காயமடைந்துள்ளனர். மூவர் காணாமல்போயுள்ளார் – என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை விடுத்துள்ள நாளாந்த நிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 10 மாவட்டங்களில் 67 ஆயிரத்து 564 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 70 ஆயிரத்து 902 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், 935 வீடுகள் பகுதியளவும், 15 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன என்றும் மேற்படி மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவரெலியா, கேகாலை, காலி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் வாழ்பவர்களே சீரற்ற காலநிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles