பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் காலமானார்

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் இன்று தனது 98ஆவது வயதில் மும்பையில் காலமானார்.

புகழ்பெற்ற மதுமதி, மொகலே ஆசாம், ராம் அவுர் ஷ்யாம், லீடர் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர் திலீப்குமார்.

பிரிவினைக்கு முந்தைய பாகிஸ்தானில் பிறந்த அவரது இயற்பெயர் யூசுப் கான். மும்பைக்கு குடிவந்த பின் 1944 ஆம் ஆண்டு ஜ்வார் பாட்டா படம் மூலம் பொலிவுட்டில் நடிக்கத் தொடங்கி இந்தியாவின் முதுபெரும் நடிகராக விளங்கினார். அழுத்தமான வசன உச்சரிப்பு, முகபாவங்களால் பல ரசிகர்களின் அன்பை அவர் பெற்றிருந்தார்.

பத்மவிபூஷண், தாதா சாகேப் பால்கே உள்பட ஏராளமான உயரிய விருதுகளை அவர் பெற்றுள்ளார். 2000 முதல் 2006 வரை அவர் மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக பதவி வகித்தார்.

முதுமை காரணமாக நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்த திலீப்குமார் மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். அரசியல் கட்சியினர், திரையுலகினர் ஏராளமானோர் திலீப்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles