‘பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்.” – என்று இந்திய பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
அப்பாவிகளின் உயிர்களை குடித்தவர்களை பழிதீர்க்காமல் இந்தியா ஓயாது எனவும் அவர் சூளுரைத்துள்ளார்.
வளர்ச்சி பாதையை நோக்கி காஷ்மீர் மக்கள் செல்வது பொறுக்காமலேயே பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிராக 140 கோடி இந்தியர்களுடன் உலக நாடுகள் கரம் கோர்த்துள்ளன என பிரதமர் மோடி மேலும் குறிப்பிட்டார்.