பழைய முகங்களுடன் புதிய கூட்டணி அமைக்கும் சஜித்: ஐ.தே.க. விளாசல்!

பொருளாதாரம் சீர்குலைந்த ஒவ்வொரு தருணத்திலும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியைக் பொறுப்பேற்றதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார். அந்தச் சந்தர்ப்பங்கள் அனைத்திலும் அவர் நாட்டைக் காப்பாற்றியதாகவும் கூறினார்.

நிலையான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் கைகோர்க்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு அவர் மீண்டும் அழைப்பு விடுத்தார்.

“ஒன்றிணைந்து வெற்றிபெறுவோம்” என்ற தொனிப்பொருளில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன மேலும் கூறியதாவது,

“நாட்டைப் பற்றி சிந்தித்து இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து இந்நாட்டின் எதிர்காலத்தையும் பொருளாதாரத்தையும் பலப்படுத்துவதே அவரது நம்பிக்கை.

ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டின் பிரதமராக ஆறு முறை பதவி வகித்தார். அந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம் அவர் கட்சியைக் காக்க பாடுபடாமல் நாட்டைப் பற்றியே சிந்தித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் கீழ் சில சலுகைகளைப் பெறுவதற்கு எமது கட்சி உறுப்பினர்கள் அதிக நம்பிக்கை கொண்டிருந்தனர். இந்நாட்டின் பொருளாதாரம் உடைந்திருந்த கால கட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஆட்சியைப் பொறுப்பேற்றார்.

2001ஆம் ஆண்டு பிரதமராக ஆட்சியமைத்து முன்னோக்கிச் சென்ற போது ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் ஏற்பட்ட பிரச்சினையால் அவரால் தனது நம்பிக்கையை நிறைவேற்ற முடியவில்லை. அவரது அரசாங்கம் வீழ்ந்தது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எதிர்மறைப் பொருளாதாரம் நேர்மறைப் பொருளாதாரமாக மாற்றப்பட்டபோது மற்ற கட்சிகள் அவரது பயணத்தைத் தோற்கடித்தன.

2005 ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்கு புலிகள் தடையாக நின்றார்கள். வடக்கு மக்களை பலவந்தமாக வாக்களிக்க வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் பொருளாதார வேலைத்திட்டம் வலுவாக இருந்த காலத்திலும் ஈஸ்டர் தாக்குதலால் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடைந்தது. அதன் பிறகு இந்த நாடு எப்படி வங்குரோத்து என்பது இந்த நாட்டு மக்களுக்கு தெரியும். இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் மீண்டும் வங்குரோத்தாகி இருந்த நாட்டை மீண்டும் வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றினார். இன்னும் ஐந்தாண்டுகளுக்கு அவருடைய வேலைத்திட்டத்தை தொடரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களில் தற்போதைய ஜனாதிபதி எவ்வாறு செயற்பட்டார் என்பது மக்களுக்கு தெரியும். இந்த ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை நியமித்தாலும் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மீண்டும் நியமிக்கப்படுவார் என்பதை நாம் அறிவோம். அவரது வெற்றி நிச்சயம்.

ஐக்கிய தேசிய கட்சியின் வரையறுக்கப்பட்ட குழு எங்களிடமிருந்து விலகிச் சென்றுள்ளது. இந்த நாட்டை சரியான இடத்திற்கு கொண்டு வரவும், இந்த நாட்டின் பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்பவும், அபிவிருத்தி நன்மைகளை பெறவும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு கட்சியினரை கேட்டுக்கொள்கின்றோம்.

இன்றைக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் பிரமாண்டமான காட்சியை வைத்து மாபெரும் கூட்டணி உருவாகும் என்று சொன்னாலும் அவர்களைச் சுற்றி முன்னாள் ஆட்கள் குவிந்துள்ளனர். தேர்தல் அனல் பறக்கும் கூட்டணியில் இருக்கும் பலர் எதிர்காலத்தில் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்பதில் உறுதியாக உள்ளோம்.

நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு கடந்த இரண்டு வருடங்களாக மொட்டு அணியினர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கின்றோம். நாமல் ராஜபக்ச இளைஞனாக இன்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறார். இன்று கீழ்மட்ட மக்கள் எப்படி நினைக்கிறார்கள் என்பதை நாமல் ராஜபக்ச தெரிந்து கொள்ள வேண்டும். மொட்டுவவிற்கு வாக்களித்த கிராமத்தில் உள்ள பலர் இன்று ரணில் விக்கிரமசிங்கவுடன் இருக்கின்றார்கள். அதனாலேயே மொட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதியைச் சுற்றிக் குவிந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு சஜித்தோ அல்லது நாமலோ சவாலானவர்கள் அல்ல.

ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தனி நபராக ஒரு ஆசனத்தைப் பெற்று நாட்டின் தலைவரானார். கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த பலர் தற்போது அவர் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்தை சரியென ஏற்றுக்கொண்டுள்ளனர். அன்று ரணில் விக்கிரமசிங்கவை எமது தரப்பிலிருந்து பாதுகாத்த அணியினர் இன்று குற்றம் சுமத்துகின்றனர். இது போன்ற செயல்கள் தங்கள் அரசியல் இலாபத்துக்காக செய்யப்படுகின்றன.”

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles