மூன்று குழந்தைகளின் கிறிஸ்தவ தாயும், லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழக (LUMS) ஊழியர் ஒருவரும் லாகூரில் உள்ள மிர் டவுனில் மணி குஜ்ஜார் தலைமையிலான குழுவால் கொல்லப்பட்டதாக பாகிஸ்தானை தளமாகக் கொண்ட voicepk.net தெரிவித்துள்ளது. இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்ததற்காக அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கொலையாளிகள் குறித்த தாயை வன்முறைத் தாக்குதலுக்கு உட்படுத்தியதோடு, அவரது முகத்தில் ஆசிட் வீசி அதை விபத்து என்று மறைக்க முயன்றதாக கூறப்படுகிறது. Voicepk.net என்பது பாகிஸ்தானின் டிஜிட்டல் மீடியா தளமாகும், இது நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், சட்டச் சிக்கல்களை விசாரிப்பதற்கும், அறிக்கையிடுவதற்கும், ஒளிபரப்புவதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பஞ்சாப் மாநிலம் பைசலாபாத்தில், மைனர் பெண் ஒருவர் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு, பின்னர் அவரைக் கடத்தியவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த விசாரணையில் மேலதிக விபரங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாகாயில் நடந்த மற்றொரு சம்பவத்தில், ஒரு சிறுமிக்கு சட்டவிரோத உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் உள்ளூர் பஞ்சாயத்து மரண தண்டனை விதித்ததாகக் கூறப்படுகிறது, அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட ஆண் காப்பாற்றப்பட்டுள்ளார், voicepk.net இன்படி, இந்த அநீதியை ஒழித்து, நீதி வழங்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பாகிஸ்தான் போராடி வரும் நிலையில் அங்கு குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் குடிமக்கள் அன்றாட அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியாமல் மக்கள் மத்தியில் பசி அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானின் வட்டார மொழி ஊடகங்களின்படி, மக்கள் மத்தியில் நல்ல தரமான சிந்தனைக்கு பதிலாக பசி அதிகரித்து வருவதாகவும், உணவு கிடைக்காமல் மக்கள் நம்பிக்கையின்றி தவிப்பதாகவும் கூறப்படுகிறது.
கல்வி நிறுவனங்களில் விரக்தி மற்றும் மகிழ்ச்சியின்மை காரணமாக சிறுவர், சிறுமிகள் அடங்கிய இளம் தலைமுறையினர் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். பாகிஸ்தானில் தினமும் 1200 சிறுவர், சிறுமிகள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர், ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு லட்சம் பேர் இந்த முறைகேடு காரணமாக அந்நாட்டில் உயிரிழக்கின்றனர். தினமும் 5,000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர் என்று பாகிஸ்தான் வட்டார ஊடகமான Daily Khabrain ஒரு அறிக்கையை மேற்கோள் காட்டி சுட்டிக்காட்டுகிறது.










