மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளைத் தவிர, நாட்டில் ஏனைய பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் தரம் ஒன்று முதல் 5 வரையான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 11 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
அத்துடன், மேற்படி பகுதிகளில் ஆரம்ப பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் அதே தினத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
