பாராலிம்பிக் – ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை வீரர் உலக சாதனை

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இடம்பெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.

F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத் இந்த சாதனையை படைத்துள்ளார்.

அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இந்த சாதனையை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்படகிறது.

Related Articles

Latest Articles