நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சு பதவி ஆகியவற்றை இராஜினாமா செய்யும் முடிவை நீதி அமைச்சர் அலி சப்ரி மீளப்பெற்றுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னரே அமைச்சர் அலி சப்ரி இந்த முடிவை எடுத்துள்ளார்.
‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியை ஸ்தாபிப்பது தொடர்பில் தன்னுடன் ஆலோசனை நடத்தப்படவில்லை என்பதால் நீதி அமைச்சர் அலி சப்ரி கடும் அதிருப்தியில் இருந்தார்.
குறித்த செயலணியின் தலைமைப்பதவி ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டமை தொடர்பிலும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சு பதவியை துறக்கும் நோக்கில் ஜனாதிபதியை சந்தித்திருந்தார்.
குறித்த செயலணியானது தனக்கு ஆலோசனை வழங்கவே நியமிக்கப்பட்டதாகவும், நீதி அமைச்சின் ஆலோசனை இன்றி சட்டக்கட்டமைப்பு மாற்றப்படாது எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இதனையடுத்தே தனது முடிவை அலிசப்ரி மாற்றியுள்ளார்.