பிரதமர் அலுவலக செலவீனங்கள் 50 வீதத்தால் குறைப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக பிரதமர் அலுவலகத்தின் செலவீனங்களை குறைப்பதற்கு பிரதமர் அலுவலகம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய பிரதமர் அலுவலகத்தின் செலவீனங்களை நூற்றுக்கு 50 வீதமாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், செலவீனங்களை குறைத்து ஏனைய அரச நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக செயற்பட வேண்டும் என பிரதமர் தனது அலுவலக பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏனைய அரச நிறுவனங்களிலிருந்து திருப்பி அனுப்பிவைக்கப்பட்ட 26 உத்தியோகத்தர்கள் தங்களது நிறுவனங்களுக்கே திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், 16 வாகனங்களும் மீள அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles