பிரம்மோஸ் ஏவுகணை வரம்புக்குள் பாகிஸ்தான்! இந்திய பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை!

 

” பாகிஸ்​தான் முழுவதும் பிரம்மோஸ் வரம்புக்குள் உள்ளது. அந்த நாட்டின் எந்த பகு​தி​யை​யும் தாக்​கலாம். ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்​போது, பிரம்​மோஸ் ஏவு​கணை தாக்​குதலின் முன்​னோட்​டத்தை நாம் பார்த்​தோம்.”

இவ்வாறு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பிரம்​மேஸ் ஏவு​கணை தயாரிப்பு மையம் உத்தர பிரதேசம் லக்​னோ​வில் கடந்த மே மாதம் தொடங்​கப்​பட்​டது. இங்கு தயாரிக்​கப்​பட்ட முதல் ஏவு​கணை யூனிட்டை பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் கொடியசைத்து தொடங்கி வைத்​தார்.

இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

” நாட்​டின் பாதுகாப்பு மற்​றும் நம்​பிக்கை வளர்ச்​சி​யில் இது முக்​கி​யமான நடவடிக்​கை. பிரம்​மோஸ் ஏவு​கணை வெறும் ஆயுதம் மட்​டும் அல்ல. இது உள்​நாட்டு திறனின் அடை​யாளம். தரைப்​படை, கடற்​படை மற்​றும் விமானப்​படையின் முது​கெலும்​பாக பிரம்​மோஸ் ஏவு​கணை விளங்​கு​கிறது.

பாகிஸ்​தான் முழுவதும் பிரம்மோஸ் வரம்புக்குள் உள்ளது. அந்த நாட்டின் எந்த பகு​தி​யை​யும் தாக்​கலாம். ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்​போது, பிரம்​மோஸ் ஏவு​கணை தாக்​குதலின் முன்​னோட்​டத்தை நாம் பார்த்​தோம்.

பிரம்​மோஸ் ஏவு​கணைக்கு உலகம் முழு​வதும் வரவேற்பு உள்​ளது. பிலிப்​பைன்ஸ் நாட்​டுக்கு பிரம்​மோஸ் ஏவு​கணை விற்​பனை செய்​த​பின் 4,000 கோடி ரூபா மதிப்​பில் பிரம்​மோஸ் ஏவு​கணை வாங்க இரண்டு நாடு​கள் ஒப்​பந்​தம் செய்​துள்​ளன. உலகம் முழு​வதும் இருந்து நிபுணர்​கள், லக்னோ வரு​வ​தால், பாது​காப்பு தளவாட வரைபடத்​தில் லக்னோ இடம்​பிடித்​துள்​ளது. 2047-ம் ஆண்​டுக்​குள் வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய, பிரம்​மோஸ் ஏவு​கணை போன்ற திட்​டங்​கள்​ மிக முக்​கிய​மானது எனவும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles